Friday, December 11, 2009





பொம்மைகளின் உலகம்




















 ன்மீது ஊறும் எறும்பை
பீதியோடு உணர்கிறது
அந்தக் குழந்தை பொம்மை.
கைகளின் மரத்தன்மை
அதனை வீறிடவைக்கிறது.
இமையற்ற அதன்
கண்ணுள் இறங்கி
கருவிழியைக் கடித்திழுக்கிறது
அச்சிற்றெறும்பு.
குழந்தையை எழுப்ப
குலைத்துக் குழைத்து
ஓய்கிறது அந்த நாய்பொம்மை . . .

நன்றி : கருக்கல்

2 comments:

  1. நல்ல கவிதை. வலைப்பூ உலகத்துக்குள் உன்னை வரவேற்கிறேன் நண்பா. தொடர்ந்து எழுது.

    -இளங்கோ கிருஷ்ணன்

    ReplyDelete